அமைச்சர் மரிய வில்சன் பதவி பறிபோகிறதா? தேர்தல் கமிஷனுக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்..!!

Minister Mariya Vilsan 2026

தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த நோட்டீஸை இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன், அண்மையில் சட்டசபை விவாதத்தின் போது தனது கல்வி நிறுவன அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி கடுமையான குற்றமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டுள்ளதால், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி அவரது எம்.எல்.ஏ. தேர்தல் வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெறுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் உயர்நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : சித்தப்பாவால் சீரழிந்த பிளஸ் 2 மாணவி..! ஆடிப்போன சித்தி..! வயிற்றில் குழந்தையோடு..! ராமநாதபுரத்தில் அரங்கேறிய அவலம்..!

Next Post

பிரபல ரவுடி கொடூர கொலை..! ரத்த வெள்ளத்தில் சுடுகாட்டில் கிடந்த சடலம்..! சென்னையில் அடுத்த பயங்கரம்..!

Sun Aug 30 , 2026
சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அங்கு வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கேளம்பாக்கம் காவல் நிலையப் போலீசார், உடலை ஆய்வு செய்தபோது அவர் கூர்மையான […]
Crime 2025

You May Like