உலக அளவில் புகழ்பெற்ற பல தீர்க்கதரிசிகளில், பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க 9/11 தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்துக் கூறியிருந்த இவர், 1996-ல் மறைந்த போதிலும் இன்னும் 3,000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளைத் தொகுத்து வைத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இவர் கணித்தபடியே போர்கள், சர்வதேசப் பொருளாதாரத் தேக்கங்கள் மற்றும் தீவிர நிலநடுக்கங்கள் போன்ற பல சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், 2026-ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா விடுத்துள்ள கணிப்புகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்தின்படி, 2026-ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பல்வேறு சவால்கள் நிறைந்த ஒரு காலகட்டமாக உருவெடுக்கிறது. குறிப்பாக, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது மனித உறவுகளில் தீவிர பிளவுகளை ஏற்படுத்துவதுடன், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையே முழுமையாக ஆக்கிரமித்துக் கட்டுப்படுத்தும் நிலையை எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும், இது சாமானிய மக்களின் நிதிநிலையை கடுமையாக பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலக வல்லரசு நாடுகள் நேருக்கு நேர் மோதும் வகையிலான ஒரு மாபெரும் உலகப் போர் மூளும் அபாயம் நிலவுவதாக எச்சரித்துள்ள பாபா வங்கா, இதன் விளைவாக கரன்சி மதிப்பு வீழ்ச்சி, வங்கிகள் திவாலாதல், கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் சர்வதேசப் பொருளாதார முடக்கம் ஆகியவை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக, ரஷ்யாவில் இருந்து ‘உலகின் அதிபதி’ என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உலக அரங்கில் தோன்றுவார் என்றும், தைவான் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களில் சீனாவின் ராணுவ மற்றும் அரசியல் ஆதிக்கம் புதிய உச்சத்தை எட்டும் என்றும் அவரது குறிப்புகள் கூறுகின்றன.
குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் பூமி சந்திக்கவிருக்கும் இயற்கை பேரழிவுகள் குறித்து பாபா வங்கா விடுத்துள்ள எச்சரிக்கைகள் மிரள வைத்துள்ளன. அவரது தீர்க்கதரிசனத்தின்படி, மனிதகுலம் இதுவரை கண்டிராத அதிபயங்கர பூகம்பங்கள், தொடர் எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் பூமியைத் தாக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த இயற்கைச் சீற்றங்களின் கோரத் தாண்டவத்தால் மட்டுமே உலக அளவில் சுமார் 7 முதல் 8 சதவீத நிலப்பரப்பு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு உருக்குலையும் என்று கூறியுள்ளார்.
மேலும், கடுமையான காலநிலை மாற்றத்தின் காரணமாக, வரலாறு காணாத திடீர் பெருவெள்ளங்களும், அதே சமயம் சுட்டெரிக்கும் தீவிர வறட்சியும் அடுத்தடுத்து ஏற்படும் என கணித்துள்ளார். இந்த தீவிர வானிலை மாற்றங்கள் பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பில் மூன்றில் இரண்டு பங்கை (2/3 பங்கு) முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்றும், இதனால் விவசாயம், குடிநீர் வளம் மற்றும் உணவுச் சங்கிலி ஆகியவை கடுமையாகச் சீர்குலைந்து உலகெங்கும் பல கோடி மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் மாபெரும் அகதிகள் நெருக்கடி உருவாகும் என்றும் பாபா வங்காவின் குறிப்புகள் எச்சரிக்கின்றன.
மேலும், விண்வெளி மற்றும் கடல்சார் அதிசயங்களாக, 2026 நவம்பரில் ஒரு பிரம்மாண்ட விண்கப்பல் பூமியை நோக்கி வரும் எனவும், அதன் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் (Aliens) மனிதகுலம் முதல்முறையாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு பழங்கால பெருநகரம் கண்டறியப்படும் வாய்ப்பும், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உலகெங்கும் மக்கள் இடம்பெயர்வும் அமைதியின்மையும் அதிகரிக்கும் என்பதும் பாபா வங்காவின் முக்கிய கணிப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
Read More : 2026-ல் கோரத் தாண்டவமாடும் இயற்கை..!! பூமியின் அழிவு ஆரம்பமா? நாம் கற்க வேண்டிய பாடம்..!!



