குழந்தைகள் சேற்றில் விளையாடினால் இவ்வளவு நன்மைகளா..? மரங்களையும் மண்ணையும் தொடுவதால் கிடைக்கும் அசாத்திய பலன்கள்..!!

Childrens 2026

மண்ணைத் தொடுவது, புல்வெளியில் அமர்வது, மரப்பட்டைகளை தொட்டுப் பார்ப்பது போன்ற எளிய இயற்கை சார்ந்த செயல்பாடுகள் நமது தோலின் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் கணிசமாகப் பலப்படுத்துவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பின்லாந்து சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வாளர் மீரா க்ரோன்ரூஸ் நடத்திய பரிசோதனையில், மண் மற்றும் பாசியை வெறும் 20 விநாடிகள் கைகளில் தேய்த்தவர்களின் தோலில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பல்வகை தன்மை (Microbiome diversity) அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. தோலில் பல்வேறு வகையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை நோய்களை உண்டாக்கும் தீய பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன.

பின்லாந்தில் உள்ள மழலையர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ‘வஹ்விஸ்டு’ (Vahvistu) ஆய்வு திட்டத்தில், காடு போன்ற அமைப்பில் சேறு, மண் மற்றும் மரத்துண்டுகளுடன் விளையாடிய குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கண்டறியப்பட்டன. அவர்களின் ரத்தத்தில் ‘காம்மா புரோட்டியோபாக்டீரியா’ மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தும் ‘டி செல்கள்’ (Regulatory T cells) அதிகரித்துள்ளது தெரியவந்தது. இது ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் அழற்சி நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இந்த நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், வீட்டு தோட்டம் அமைக்கும் பெரியவர்களுக்கும், அலுவலகங்களில் பசுமைச் சுவர்கள் அமைக்கப்பட்ட சூழலில் பணிபுரிபவர்களுக்கும் கூட சம அளவில் கிடைப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீன நகரமயமாதலில் மக்கள் இயற்கையை விட்டு விலகிச் செல்வதே பல நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகளுக்குக் காரணம் எனக் கூறும் விஞ்ஞானிகள், அன்றாட வாழ்வில் கைகளில் சேறு படுவதைப் பற்றி அஞ்சாமல் இயற்கையைத் தொட்டு உணர்வது உடல்நலத்திற்கு மிக அவசியமானது என வலியுறுத்துகின்றனர்.

Read More : பீகாரை புரட்டிப் போடும் வெள்ளம்..! 45 லட்சம் பேர் பாதிப்பு..! மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது!

Next Post

ஆன்லைன் மூச்சுப் பயிற்சி உயிருக்கே ஆபத்தா..? எவ்வளவு நேரம் மூச்சை அடக்கலாம்..? மருத்துவ நிபுணர்கள் ஷாக்கிங் தகவல்..!!

Sat Sep 12 , 2026
சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட விநாடிகள் மூச்சை அடக்கி பிடித்தால் நுரையீரல் பலமாக இருப்பதாக கூறப்படும் காணொளிகள் வைரலாகி வரும் சூழலில், மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வயது வந்த நபர் ஒருவர் நிமிடத்திற்கு 12 முதல் 20 முறை சுவாசிப்பதே இயல்பானது. சமூக ஊடகங்களில் காட்டுவது போல அதிக நேரம் மூச்சை அடக்குவது நுரையீரலின் திறனை மேம்படுத்தாது; மாறாக, உடலில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதை மூளை தாங்கிக்கொள்ளும் திறனை மட்டுமே […]
Breath 2026

You May Like