அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்காக 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரகசிய உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை தாக்குதலுக்கான இலக்குகளாக பரிசீலித்திருந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அமெரிக்க உளவு அமைப்பான CIA பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. 9/11 தொடர்பான 71 உளவுத்துறை அறிக்கைகள் இதில் இடம்பெற்றிருந்தன. இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த தகவல்களில் ஒன்றில்தான் இந்தியாவை குறிவைக்கும் அல்-கொய்தாவின் திட்டம் குறித்த பதிவு வெளியாகியுள்ளது.
1998 ஆகஸ்ட் 28-ம் தேதி தயாரிக்கப்பட்ட “Bin Ladin Terrorist Network Still a Threat” என்ற தலைப்பிலான அறிக்கையில், பின்லேடன் தலைமையிலான அமைப்பு பல நாடுகளில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்து, அரேபிய தீபகற்பம், இந்தியா, பாகிஸ்தான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த சிலர் அல்பேனியாவின் தலைநகர் திரானா மற்றும் அஜர்பைஜானின் பாகு நகரில் தாக்குதல்களுக்கு தயாராகி வந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவில் எந்த குறிப்பிட்ட இடத்தை அல்லது எந்த வகையான தாக்குதலை நடத்த பின்லேடன் திட்டமிட்டிருந்தார் என்பதற்கான விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்பே இந்தியாவும் பாகிஸ்தானும் அல்-கொய்தாவின் சாத்தியமான இலக்குகளாக அமெரிக்க உளவுத்துறையின் கவனத்தில் இருந்ததை மட்டுமே இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது.
1998 ஆகஸ்ட் மாதம் கென்யாவின் நைரோபி மற்றும் தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த இரு தாக்குதல்களிலும் 224 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னர் பின்லேடன் மற்றும் அல்-கொய்தாவின் செயல்பாடுகள் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய கவனத்தைப் பெற்றன.
இதற்கிடையில், 2001 டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படும் அந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது.
பின்லேடனைத் தேடும் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் பின்னர் பாகிஸ்தானும் முக்கிய இடத்தைப் பெற்றது. அல்-கொய்தா மற்றும் தலிபானுடனான பின்லேடனின் தொடர்புகளை அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்ததை CIA ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. 2000 ஜூன் மாதம் தயாரிக்கப்பட்ட மற்றொரு அறிக்கைக்கு “Pakistan pressing Bin Ladin network” என தலைப்பிடப்பட்டிருந்தது.
பின்லேடன் தனது இறுதி ஆண்டுகளை பாகிஸ்தானில் மறைவாக கழித்தார். அவரது முக்கிய உதவியாளர்களில் ஒருவரின் நடமாட்டத்தை அமெரிக்க உளவுத்துறை கண்காணித்ததன் மூலம், இஸ்லாமாபாத் அருகே உள்ள அபோட்டாபாத் பகுதியில் ஒரு வளாகத்தில் அவர் பதுங்கியிருந்தது 2010-ல் கண்டறியப
Also Read: பொங்கலுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு? குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் சொன்ன முக்கிய தகவல்!



