யுஎஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்!. பென் ஷெல்டனை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

US Open title 30kb

2026-ம் ஆண்டுக்கான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஷெல்டனும் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவும் மோதினர். செப்டம்பர் 13 அன்று நியூயார்க்கில் உள்ள ஆர்தர் அஷ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான இறுதி ஆட்டத்தில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி வீரர் ஸ்வெரெவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.


ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஸ்வெரெவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த அவர், டை-பிரேக்கரில் 7-6 (7-2) என்ற கணக்கில் அதைக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். ஸ்வெரெவ் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் எழுச்சி பெற்று கம்பேக் கொடுத்தார்.

மூன்றாவது செட்டை 5-7 என்ற கணக்கில் ஷெல்டன் கைப்பற்றினார். எனினும், நான்காவது செட்டில் மீண்டும் தனது முழுத் திறமையைக் வெளிப்படுத்திய ஸ்வெரெவ் 6-2 என்ற கணக்கில் வென்று தனது முதல் யுஎஸ் ஓபன் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்காகக் காத்திருந்த ஸ்வெரெவ், ஒரே ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் அவர் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றிருந்த நிலையில், தற்போது யுஎஸ் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார். ஓபன் சகாப்தத்தில் ஜிம்மி கானர்ஸ், கில்லர்மோ விலாஸ் மற்றும் ஜானிக் சின்னர் ஆகியோருக்குப் பிறகு, தனது முதல் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ஒரே ஆண்டில் வென்ற நான்காவது வீரர் என்ற பெருமையை ஸ்வெரெவ் பெற்றுள்ளார்.

வெற்றிக்குப் பிறகு மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்த ஸ்வெரெவ், நேராக பென் ஷெல்டனின் முகாமுக்கு சென்று அவர்களின் சிறப்பான தொடர் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், மைதானத்தில் நிலவிய அற்புதம் சூழல் குறித்தும், தனக்கு ஆதரவளித்த கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தும் அவர் பேசினார்.

வெற்றிக்குப் பின் பேசிய அவர், “எரிக் [புட்டோராக்], போட்டி இயக்குநராக உங்கள் முதல் ஆண்டு, இவ்வளவு அற்புதமான நிகழ்வை நடத்தியதற்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு தவறான நபர் வென்றுவிட்டதற்காக நான் வருந்துகிறேன்! நான் என் வேலையைச் செய்தேன், ஆனால் மிக்க நன்றி, நீங்கள் அற்புதமாகச் செய்தீர்கள். கூட்டத்தைப் பொறுத்தவரை, இன்று 99.9 சதவீதமான மக்கள் பென் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள் என்பது எனக்குத் தெரியும், எனவே முதலில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“ஆனால் இரண்டாவதாக, இங்கு விளையாடுவது நம்பமுடியாத சூழலாக இருந்தது. கூட்டத்தினர் எனக்கு எதிராக இருந்தபோதிலும், அவர்கள் எப்போதும் நம்பமுடியாத அளவுக்கு நியாயமாக நடந்துகொண்டனர். வீரர்களாக நாங்கள் அதை மதிக்கிறோம். நீங்கள் கொண்டுவந்த ஆற்றலுக்கும் சத்தத்திற்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றி கூறுகிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

1newsnationuser5

Next Post

சென்னை விமான நிலையத்தில் புதிய பிக்கப் பிளாசா திறப்பு!. போக்குவரத்து நெரிசலை குறைக்க நவீன வசதிகள்!

Mon Sep 14 , 2026
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் ஏறும் தளத்தை (Pickup Plaza) மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கி. ராம்மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முனையத்திற்கு முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயணிகள் ஏறும் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உட்பட ரூ. 22.88 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, பயணிகளை […]
Pickup plaza 30kb

You May Like