கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக பயணிகள் விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு யணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பயணிகள் ரயில் “மைசூர் – தர்பங்கா” ரயில் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.