fbpx

சூப்பர்…! UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.5 லட்சம் வரை வழங்கும் அரசு…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…? முழு விவரம்

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் பெருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம்‌ வரை பெறலாம்‌.

ஏற்கனவே உள்ள UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு அதிகபட்சமாக 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்‌. எஸ்‌.சி., எஸ்‌.டி., எம்‌.பி.சி., பி.சி, சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்‌ 45 வயது வரை கடன்‌ பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய அரசாணை படி UYEGP மற்றும்‌ NEED திட்டத்தில்‌ பொதுப்பிரிவு ஆண்களுக்கு 45 வயது வரையிலும்‌, எஸ்‌.சி., எஸ்‌.டி, எம்‌.பி.சி., பி.சி., சிறுபான்மையினர்‌, பெண்கள்‌, முன்னாள்‌ ராணுவ வீரர்‌ ஆகியோர்க்கு 55 வயது வரையிலும்‌ வங்கியில்‌ விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

English Summary

Government to provide up to Rs. 5 lakh under UYEGP scheme…! Who can apply for this?

Vignesh

Next Post

நடுவானில் விமானம் மீது மின்னல் தாக்கிய அதிர்ச்சி!. அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பீதி!. வைரல் புகைப்படங்கள்!

Wed Dec 25 , 2024
Lightning Plane: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்காடா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மீது மின்னல் தாக்கியதையடுத்துஅவசர அவசரமாக தரைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரஸ்ஸல்ஸில் இருந்து ஹுர்கடா நோக்கி பயணித்த TUI விமானம் நடுவானில் மின்னல் தாக்கியது. இதையடுத்து, பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. TUI செய்தித் தொடர்பாளர் Piet Demeyere கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை […]

You May Like