fbpx

SBI வங்கியில் 1,194 காலியிடங்கள்..!! சென்னையில் வேலை..!! தேர்வு கிடையாது..!! மாதம் ரூ.80,000 வரை சம்பளம்..!!

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)

பணியின் பெயர் : Concurrent Auditor

காலியிடங்கள் : 1,194

தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் : சென்னை, அகமதாபாத், அமராவதி, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். (சென்னையில் 88 காலியிடங்கள் உள்ளது)

வயது வரம்பு : 60 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

MMGS III -ல் ஓய்வு பெற்றவர்கள் என்றால் மாதம் ரூ.45,000

SMGS -IV ல் ஓய்வு பெற்றவர் என்றால் மாதம் ரூ.50,000

SMGS-V ஓய்வு பெற்றவர் என்றால் மாதம் ரூ.65,000

TEGS – VI ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.80,000 வரை சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிப்பது எப்படி..?

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, தங்களின் அடையாள அட்டை, வயது ப்ரூப் போன்ற அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.

இப்பணிக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க : https://recruitment.bank.sbi/crpdrs33/apply

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2025

Read More : ’60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசினால் மட்டும் போதுமா’..? இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..? திமுக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர்..!!

English Summary

A notification has been issued to fill 1,194 vacant posts in the public sector bank State Bank of India.

Chella

Next Post

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய குடும்பம்..!! லாரி மீது கார் மோதியதில் 5 பேர் துடிதுடித்து மரணம்..!!

Wed Feb 19 , 2025
Five people died in a road accident while returning to their hometowns after taking a holy dip in the Maha Kumbh Mela.

You May Like