ஒன்றுமறியா 4 வயது குழந்தையை…!! சூடுவைத்த வழக்கில் அம்பலம்!!

4 வயது குழந்தையை சூடு வைத்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி கௌரி. இருவருக்கும் ஷிவானி என்ற 4 வயது மகள் இருந்தார். இவர் மல்லிகா என்பவர் வீட்டில் குடியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் குமார் (31), மனைவி கீர்த்திகா(23) இவர்கள் இருவரும் திருப்பூர் தம்பதியின் வீட்டு உரிமையாளர் மல்லிகாவின் நெருங்கிய உறவினர்கள். இதனால் மல்லிகாவை சந்திக்க அடிக்கடி திருப்பூருக்கு சென்று வந்துள்ளனர்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் ராஜேஷ்குமார் – கீர்த்திகா தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் ஷிவானியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தையை தன்னிடம் அனுப்பி வையுங்கள் நாங்கள் அடுத்த முறை வரும்போது குழந்தையை அழைத்து வருகின்றோம் என்று கேட்டுள்ளனர். குழந்தை இல்லாத அவர்கள் தங்கள் மகள் மீது அதிக பாசம் வைத்திருக்கின்றார்கள் எனவே அவர்களுக்கு எப்படி மறுப்பு சொல்வது என நினைத்த தம்பதியினர் சென்று வரட்டும் என அனுப்பி வைத்தனர்.

சில நாட்களில் கொண்டு வருவதாக கூறிய நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை குழந்தைக்கு அடிபட்டுவிட்டதாக கூறி மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மருத்துவர்களிடம் குழந்தை பாத்ரூமில் வழுக்கிவிட்டதாக கூறிய நிலையில் சூடு வைத்த காயங்கள் சந்தேகத்தை வரவழைத்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

எனினும் இது குறித்து காவல்துறையில் தகவல் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மதுரை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். குழந்தை ஷிவானியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் மிகவும் குறும்புத்தனமாக இருந்ததாகவும் இதனால் சூடு வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது மேலும் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டதால் இருவரும் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் தான் ஒட்டு மொத்த அதிர்ச்சியும் வெளியில் வந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை படுத்தியது அறிக்கையில் பகீர் என வெளிவந்துள்ளது. இந்த தகவலின் படி ராஜேஷ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததையும் இதற்கு மனைவியும் உடந்தையாக இருந்தார் என்பதையும் ராஜேஷ்குமார் ஒப்புக் கொண்டார்.

ராஜேஷ்குமார்-கிருத்திகா தம்பதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Post

மாநிலம் முழுவதும் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை...! இன்று அரசு முக்கிய ஆலோசனை...!

Mon Nov 7 , 2022
டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம். இது தொடர்பாக மாநிலத்தின் […]

You May Like