இளம்பெண்ணை ஏமாற்றி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் ஸ்வேதா (22). தாய்-தந்தையை இழந்த இவர், தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். ஸ்வேதா, மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், துக்காம் பாளையம் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (27) என்பவர் ஸ்வேதா வேலைபார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வரவே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கடந்த நான்கு வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்வேதா தியாகராஜனிடம் கேட்டுள்ளார்.

ஆனால், தியாகராஜன் ஸ்வேதாவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று ஸ்வேதா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த தியாகராஜன், அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றார். இதற்கு இணங்காத ஸ்வேதா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஸ்வேதாவின் அத்தை, மாமா மற்றும் உறவினர்கள், தியாகராஜனை அடித்து பாதிக்கப்பட்ட பெண்ணுடனே திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, தியாகராஜன் பல பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், பழகிய பெண்களின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டியும் வந்துள்ளார். அதேபோன்று ஸ்வேதாவையும் மிரட்டி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.