பெரும் விபத்து: லாரி மீது மோதிய கார்..! 10 பேர் பலி..!

குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்தில் உள்ள அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் கார் ஒன்று வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி வேகமாக சென்றுள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்ற டேங்கர் லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களின் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Post

முடிந்தது நேரம்.! இனி இதை செய்தால் 2 வருஷம் ஜெயில் உறுதி..!!

Wed Apr 17 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப். 17) மலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை உள்ள தேர்தல் விதிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்த விதிமுறைகளின்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள், […]

You May Like