சமயபுரம் கோயில் வாசலில் தலை நசுங்கி பக்தர் பலி.. புதிய காருக்கு பூஜை போட வந்த இடத்தில் விபத்து..!!

samayapuram temple accident

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகாலையிலே நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கைப்பற்றி, கார் ஓட்டுநரை கைது செய்தனர். உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய நபர் யார்..? எங்கிருந்து வந்தவர் என்ற தகவல் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய வாகனத்தை கோயிலில் பூஜைக்கு கொண்டு வருவது ஒரு நம்பிக்கையாக இருந்தாலும், எச்சரிக்கையற்ற ஓட்டம், ஒரு பக்தரின் உயிரை பறித்திருப்பது தற்போது பெரும் சோகத்தையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

Read more: சோனமின் ஆபரேஷன் ஹனிமூன்!. சூட்கேஸில் கிடைத்த துப்பு!. தாலி, மோதிரம் எப்படி போலீசாருக்கு உதவியது?.

Next Post

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்!. அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ள நாடு எது?. இந்தியாவுக்கு எந்த இடம்?

Thu Jun 12 , 2025
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை தொழில்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு தகுந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இயல்பான குழந்தைப்பருவத்தை உறுதி செய்வதே இந்த நாளின் […]
child labour 11zon

You May Like