ஒரே மாதத்தில் ரூ.2.80 கோடி வருமானம் பார்த்த தம்பதி..!! இன்னும் ரூ.3.5 கோடி விற்பனைக்கு தயாராக இருக்கும் தக்காளி..!!

நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ள நிலையில், புனேவை சேர்ந்த விவசாய தம்பதி தக்காளி விற்றே கோடீஸ்வரராகி உள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரும் அவரது மனைவியும் கடந்த 6 ஆண்டுகளாக 14 ஏக்கர் நிலத்தில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தக்காளி விளைச்சலால் ரூ.20 லட்சம் வரை இழப்பை சந்தித்ததாலும், தக்காளி விளைச்சலை கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தனர். இந்நிலையில், தக்காளி விலை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் விவசாய தம்பதி தக்காளி விற்றே கோடீஸ்வரராகி உள்ளனர்.

அதாவது ஒரு பெட்டி தக்காளியை ரூ.770 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,000 பெட்டிகள் தக்காளியை விற்று ரூ.2.80 கோடி வரை வருமானம் ஈட்டி உள்ளனர். மேலும் 4,000 பெட்டி தக்காளி விற்பனைக்கு வைத்திருப்பதாகவும் அதன் மூலம் இன்னும் ரூ.3.5 கோடி வருவாய் ஈட்ட உள்ளதாகவும் விவசாயி ஈஸ்வர் காயகர் கூறியுள்ளார். தக்காளியை விற்பதன் மூலம் ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.30 கிடைக்கும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால், இந்த சீசனில் தக்காளி விற்பனை பம்பர் லாட்டரியாக அமைந்து இருப்பதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

இதுக்கு மட்டும் திமுக அமைச்சர்களிடையே எந்தவித பாகுபாடும் இல்லை…..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நச் பதில்…..!

Mon Jul 17 , 2023
வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி பெறுவதற்காக இன்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் நேரில் சென்று […]

You May Like