ஹால், கிச்சன் சென்றும், விடாமல் துரத்தி அக்கிரமம் செய்த டெலிவரி ஊழியர்! காவல்துறை கைது செய்து விசாரணை !

சென்னையில் பிரபல நிறுவனத்திலிருந்து பொருட்களை டெலிவரி செய்ய வந்த இடத்தில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் அத்துமீறியதாக 32 வயது டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை துறைப்பாக்கத்தைச் சார்ந்த பெண் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த மூன்றாம் தேதி பிக் பாஸ் நிறுவனம் மூலமாக மளிகை பொருட்களை ஆர்டர் செய்ததாகவும் ஐந்தாம் தேதி அந்த பொருட்களை டெலிவரி செய்ய அந்நிறுவனத்தின் ஊழியர் ஊழியர் எடுத்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அப்போது உணவருந்திக் கொண்டிருந்ததால் அந்த ஊழியரிடம் ஹாலில் பொருட்களை வைத்து விட்டு செல்லுமாறு கூறினேன் ஆனால் வீட்டில் யாருமில்லாததை அறிந்த அந்த ஊழியர் என்னிடம் சில விரும்பத் தகாத செயல்களை செய்ய ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் சமையலறையில் சென்று ஒளிந்து கொண்டேன். அந்த ஊழியரை வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து அத்துமீறல் ஈடுபட்டார். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிப்பேன் எனக் கூறியும் அதை கண்டு கொள்ளாமல் என்னுடைய செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் அச்சமடைந்த நான் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என் வீட்டிற்கு வந்தனர் இதனையறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.


இது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தேன். மேலும் அந்த நபரை பற்றி காவல்துறையில் புகார் அளிக்க அவரது பெயர் முகவரி மற்றும் செல்போன் நம்பர் கேட்டேன் அவர்கள் பெயரை மட்டும் கூறிவிட்டு மற்ற விபரங்களை தெரிவிக்கவில்லை என அந்த புகாரில் தெரிவித்துள்ளார் இவரது புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறை துரைப்பாக்கம் பகுதியைச் சார்ந்த 32 வயது வாலிபரான ஜெயபால் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய வந்த இடத்தில் டெலிவரி பாய் இளம் பெண்ணிடம் அத்துமீறி விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1newsnationuser5

Next Post

"என் மனதை புரிந்து கொள்ள யாருமே இல்லையா"?? என்ற ரேஞ்சில் பேசிய அமெகா ரோபோ!

Fri Apr 7 , 2023
தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என  உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த  இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள்  மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன. சமீபத்தில் […]
IMG 20230407 WA0090

You May Like