மாடுகளுக்கு பரவி வரும் நோய்…! உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்…! இல்லையென்றால் ஆபத்து…!

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு 3,86,500 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

cows PTI

தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்‌ மூலமாகவும்‌,கால்நடை மருந்தகங்கள்‌ மூலமாகவும்‌, இதுவரை 1,63,600 டோஸ்கள்‌ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு விரைந்து தடுப்பூசியினை செலுத்தும்‌ விதமாக ஆங்காங்கே முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை தங்களது மாடுகளுக்கு தோல்கழலை நோய்‌ தடுப்பூசி செலுத்தாத கால்நடை வளர்க்கும்‌ விவசாய பெருமக்கள்‌ அருகிலுள்ள கால்நடை மருந்தத கால்நடை உதவி மருத்துவரை அணுகி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம்.

மேலும்‌ விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர்‌ கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியின் 9445001113 கைபேசி எண்‌ அல்லது உதவி இயக்குநர்‌ கால்நடை நோய்‌ புலனாய்வு பிரிவு அதிகாரியின் 9443202009 கைபேசி எண்‌ மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

சற்று முன்...! 266 ரயில் சேவை முழுமையாக ரத்து...! எந்தெந்த ரயில்கள்...? எப்படி தெரிந்து கொள்வது...?

Sat Jan 7 , 2023
வானிலை காரணமாக 266 ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, இன்று காலை புறப்பட வேண்டிய 266 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன, மற்ற ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, […]
trains

You May Like