நடிகர் தீனா திரைபட துறையில் வில்லனாக பல நடிகர்களுடன் வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்த விருமாண்டி என்ற படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானவர் நடிகர் தீனா .
பிறகு தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மாநகரம், எந்திரன், ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில், வட சென்னை, மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் என ஹிட் குடுத்த பல படங்களை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.
இவரின் நடிப்பையும் தாண்டி எதார்த்தமான பேச்சுக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கின்றார்கள். மனதில் எதையும் வைத்து கொள்ளமல் வெளிப்படையாக பேசுபவர். கொரோனா வைரஸ் பாதிப்பினால் தனது வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு தானே முன்வந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தவர். தீனாவின் பேச்சுகளில் இந்த சமூகத்தின் மீதான அக்கறை எப்போதுமே தெறியும்.
இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா என்பவர் முன்னிலையில் வைத்து 22 உறுதிமொழிகளை ஏற்று தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அந்தப் படங்கள் யாவும் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.