உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக டிக்கெட் பரிசோதவருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரயில்களில் பயணம் செய்யும்போது அரசு அலுவலர்களுக்கு என்று இலவச சலுகைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்நி அவர்களும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணம் ஒன்றின் போது இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக ரயிலின் டிடிஆர் மற்றும் காவல் துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் காவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு ரயில்வே அமைச்சகம் அவரை பணியிலிருந்து நீக்கி இருக்கிறது. இது தொடர்பாக இரு வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ள இணைவாசிகள் ரயில்வே அமைச்சகம் தங்களது டிடிஆரை பதவி நீக்கம் செய்து விட்டது ஆனால் உத்தர பிரதேச காவல்துறை டிஜிபிஐ எப்போது பதவி நீக்கம் செய்யும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.