இலவச ரயில் டிக்கெட்டினால் காரசாரமான வாக்குவாதத்தில் இறங்கிய போலீஸ் மற்றும் டி டி ஆர்!

உத்திர பிரதேச மாநிலத்தில் ரயிலில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக டிக்கெட் பரிசோதவருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . ரயில்களில் பயணம் செய்யும்போது அரசு அலுவலர்களுக்கு என்று இலவச சலுகைகள் மத்திய அரசாலும் மாநில அரசாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்நி அவர்களும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் பயணம் ஒன்றின் போது இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக ரயிலின் டிடிஆர் மற்றும் காவல் துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


இந்த மோதல் சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் காவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு ரயில்வே அமைச்சகம் அவரை பணியிலிருந்து நீக்கி இருக்கிறது. இது தொடர்பாக இரு வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ள இணைவாசிகள் ரயில்வே அமைச்சகம் தங்களது டிடிஆரை பதவி நீக்கம் செய்து விட்டது ஆனால் உத்தர பிரதேச காவல்துறை டிஜிபிஐ எப்போது பதவி நீக்கம் செய்யும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்..!! பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி..!! மொத்தம் 56..!!

Thu Mar 16 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்ற இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்த நிலையில், அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு அடுத்தபடியாக […]
ரத்த வாந்தி எடுத்த இளைஞர்..!! பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி..!! மொத்தம் 56..!!

You May Like