#Breaking: கனமழை காரணமாக 7 மாவட்டத்தில் உள்ள இன்று விடுமுறை…! எந்தெந்த மாவட்டம்…? முழு விவரம் இதோ…

காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

Wed Nov 2 , 2022
திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் பழக்கமான பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரை காதல் வலையில் வீழ்த்தி, சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரே வீட்டில் உல்லாசமாக வசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், புதுக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பிளஸ் 2 படித்து வருகிறார். இதேபோல் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் […]
’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

You May Like