உத்திர பிரதேசம் மாநிலத்தில் கணவர் மற்றும் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஷாஜீர் இவரது மனைவி குட்டு. இவர்கள் இருவரும் தங்களது மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு சாஜீர் தனது மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறார் அப்போது ஆத்திரம் மிகுதியால் அவர் தனது குழந்தைகளின் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரத்தை கண்டு பயத்தால் அலறிய குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலலிருப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற அந்த பெண்ணின் கணவரையும் பிடித்து காவல்துறை வந்தவுடன் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் அவர்களின் மூத்த மகள் தனது தந்தை அம்மாவை எவ்வாறு கொலை செய்தார் என சாட்சியம் சொன்னது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்