மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட வருவாய் அலகின் கீழ் உள்ள 11 வட்டங்களில் மொத்தம் 155 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- மதுரை கிழக்கு -5
- கள்ளிக்குடி – 2
- மேலூர் – 23
- மதுரை வடக்கு – 15
- மதுரை தெற்கு – 7
- திருமங்கலம் – 7
- உசிலம்பட்டி – 8
- வாடிப்பட்டி – 13
- மதுரை மேற்கு – 11
- பேரையூர் – 28
- திருப்பரங்குன்றம் – 6
- மொத்தம் – 155
வயது வரம்பு:
பொதுப்பிரிவு: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயது
பிசி / எம்பிசி / டிசி: அதிகபட்சம் 39 வயது
எஸ்சி / எஸ்டி / விதவைகள்: அதிகபட்சம் 42 வயது
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: அரசின் விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்
கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலை (10th) தேர்வில் தமிழ் ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மற்ற தகுதிகள்: மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் கிராமம் / தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து, அதில் கேட்டிருக்கும் விவரங்களை நிரப்பி, கல்வித்தகுதி, வீட்டு முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை இணைத்து தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2025.



