உருவாகும் புதிய இணையதளம்..! கதிகலங்கும் திமுக… எகிறி அடிக்கும் அண்ணாமலை..!

திமுகவின் ஊழலை புகார் செய்ய புதிய இணையதளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் விலை ரசிதை கேட்டு நாளுக்கு நாள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்.


இந்நிலையில் இன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில் வாஜ்பாய்-ன் 98 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 100 பேருக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. திமுக வந்த பிறகு பாஜகவிற்கு எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இது எப்போதும் இல்லாத எழுச்சி.

ரபேல் வாட்ச் மூலம் பேசும் பொருளாக ஊழல் ஏற்பட்டுள்ளது. ஊழலைப் பற்றி பேச தராதரம் வேண்டும். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுக நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. 25 எம்பிகளை வாங்க ரபேல் வாட்ச்சும் அங்கு உழைக்கும். பொதுமக்கள் திமுகவின் ஊழலை புகார் செய்யும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் திமுக அமைச்சர்களின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க, இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது. இரண்டு லட்சம் கோடியா வாட்சின் பில்லா.? டீக்கடையில் பேசுவார்கள்.

பாஜகவின் சார்பில் பூத்து கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வசிக்கும் இடத்தில் பூத் கமிட்டி இல்லை என்றால் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டும். நாம இப்போ டூ ஆர் டை காலத்தில் உள்ளோம். 2024 இல் திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். 25 எம்பிக்கள் வாங்கி விட்டால் திமுக நடைபிணம் ஆகிவிடும், அதன்பிறகு ஆட்சியில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன. எல்லா சூழ்நிலையும் உருவாக்கி விடலாம். தொண்டர்கள் தான் பாஜக வெற்றியை தீர்மானிப்பவர்கள். நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவ வைக்கிறார். உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை. தொண்டர்கள் கடுமையாக பாடுபடுங்கள். 2024 திருப்புமுனை பொள்ளாச்சியில் இருந்து வரும் என் கூறினார்.

Newsnation_Admin

Next Post

அடுக்கடுக்கான கேள்விகள்..!! அஃப்செட் ஆன மாணவி..!! பதறிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Wed Dec 21 , 2022
செல்போனில் அம்மா கடுமையாக பேசியதால், மனமுடைந்த கல்லூரி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் தனது கல்லூரியின் விடுதியில் தங்கி உள்ளார். ஆனால், அவருக்கு அங்கு ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால், ஸ்ரீமதியின் பெற்றோர் குரோம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதியுடன் தங்கி உள்ளனர். கடந்த டிசம்பர் 18ஆம் […]
அடுக்கடுக்கான கேள்விகள்..!! அஃப்செட் ஆன மாணவி..!! பதறிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

You May Like