#திருச்சி : பெட்ரோல் ஊற்றி மிரட்ட நினைத்தவர், தன் உயிருக்கே உலை வைத்து கொண்ட சம்பவம்..!

திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் ராஜாவிடம் கூறிய போது அவர் குடுத்த மொத்த பணத்தையும் திருப்பி கேட்டுள்ளார். அப்போது ஒரு லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரங்கராஜ், ராஜாவை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் இவர் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டு தீயை வைக்க முயன்றுள்ளார். இதனிடையே எதிர்பாராத விதமாக ரங்கராஜ் இடது கையில் இருந்து அவரது லைட்டரை அழுத்தியதும் சட்டென்று தீப்பற்றியது.

இதனை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் ரங்கராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்திக்குத்தால் காயமடைந்த ராஜாவையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. காவல்துறையினரின் இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தந்தையை காப்பாற்ற 2 மாத குழந்தை நரபலி..? மூடநம்பிக்கையால் முட்டாளான இளம்பெண்..!!

Sun Nov 13 , 2022
இறந்து போன தன் தந்தையின் உயிரை திரும்பக் கொண்டு வரும் வினோதமான முயற்சியில், பெண் ஒருவர் 2 மாதமே ஆன குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் ஒரு பெண்ணின் தந்தையை இறந்து போயுள்ளார். தன் தந்தை மீது பாசம் கொண்ட அப்பெண்ணிடம் ஒருவர், இறந்துபோன தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க புதிதாக பிறந்த குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் […]
தந்தையை காப்பாற்ற 2 மாத குழந்தை நரபலி..? மூடநம்பிக்கையால் முட்டாளான இளம்பெண்..!!

You May Like