திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது ஆளுநரிடம் புகார்…..! சென்னையில் அதிமுக பேரணியால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து….!

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஒட்டுமொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்று வருகிறது.


அதனடிப்படையில், வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் எல்லோரும் ஒன்றிணைந்து அங்கிருந்து சின்னமலை தாலுக்கா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்கின்றனர். இதனை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு வழங்க உள்ளனர்.

இந்த பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி போன்ற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Next Post

கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்…..! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…..!

Mon May 22 , 2023
போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார். அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி […]
EPS

You May Like