தாய் இறந்த துக்கத்தில் செல்ல மகன் எடுத்த் முடிவு.! அதிர்ச்சியில் தந்தை.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதி சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் வசித்து வந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் வருண் என்பவர், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் வருணின் தாய் குடும்பத்தில் நிகழ்ந்த சில பிரச்சனை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.


இதனை ஏற்று கொள்ளாத மகன் வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனிமையிலே இருந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முந்தினம் தனியாக வீட்டில் இருந்து வந்த வருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளான தந்தை அருகில் இருக்கும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், தற்கொலை குறித்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தாய் இறந்த துக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாத வருண் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வருண் தற்கொலைக்கு இன்னும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவோ என்ற பல்வேறு கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இல்லாத துக்கத்தில் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

Gpay, PhonePe-க்கு சிக்கல்..!! இனி 30% தானாம்..!! அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!! யாருக்கு சாதகம்..?

Fri Nov 4 , 2022
இந்திய சந்தையில் ஒரு பேமண்ட் அப்ளிகேஷன் 30% சந்தை பயனர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன. அதேசமயம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு […]
Gpay, PhonePe-க்கு சிக்கல்..!! இனி 30% தானாம்..!! அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி..!! யாருக்கு சாதகம்..?

You May Like