பீகார் மாநிலத்தில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து பத்து வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் புத்தகயா மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பீகார் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அங்குள்ள காவல் நிலையம் அருகே இருக்கும் பால்பண்ணை பகுதியில் சென்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மூன்று சிறுவர்கள் சிறுமியை கடத்திச் சென்று இருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து இருக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அதன் அடிப்படையில் தீவிரமாக விசாரணை செய்து இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். 10 வயது சிறுமியை சிறுவர்களே கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி பெற்றோரிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. யாரை நம்பி பெண் குழந்தைகளை தனியே விடுவது? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.