இந்தியாவின் இளைய தலைமுறையினர்(‘Gen Z’) மற்றும் மாணவர்களுடன் மத்திய அரசாங்கத்தின் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், ‘ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்’ (One Day, One University) என்ற புதிய மற்றும் விரிவான மக்கள் தொடர்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு மத்திய அமைச்சர் தினமும் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பயணம் செய்து மாணவர்களை நேரடியாகச் சந்திப்பார்கள். நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் அமைச்சர்களிடம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் பல்வேறு மத்திய அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவி திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் இக்கூட்டங்களில் விளக்குவார்கள். இந்தச் சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கல்வித்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 1,300 பல்கலைக்கழகங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் விவாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் NEET தேர்வு முறை தொடர்பான மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, மாணவர்களுடன் வெளிப்படையான உரையாடலை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தேவைகளைப் புரிந்து கொள்ளவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.



