திருமணமாகி ஒரே மாதத்தில் காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்து கழுத்தை அறுத்த பெண்!. இருவரும் கைது!

கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி போகவில்லை. இந்நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி தாட்சாயிணி தனது காதலரான சங்கமங்களம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து கணவர் சரவணன் அடித்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். பின்னர் தாட்சாயினி மற்றும் அவரது காதலர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர் இது தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரை விசாரித்ததில் தட்சாயினி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர்.


இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாட்சாயினியும் ராஜசேகரும் காதலித்து வந்துள்ளனர். இது தாட்சாயினி பெற்றோருக்கு பிடிக்காததால் அவரை வலுக்கட்டாயமாக சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னும் ராஜசேகருடன் பேசி வந்திருக்கிறார் தாட்சாயிணி. இதனை சரவணன் கண்டித்ததால் தனது காதலர் ராஜசேகரை வீட்டிற்கு வரவழைத்து சரவணன் தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். திருமணமான ஒரு மாதத்திலேயே காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

உத்திரபிரதேசத்தில் பரபரப்பு: ஓடும் காரில் இளம் பெண்ணை உள்ளே இழுத்து ஆடைகளை கிழித்து நேர்ந்த கொடுமை! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

Thu Mar 30 , 2023
உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் திருமணமான பெண்ணை காரில் கடத்திச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் ரிங்கு இஸ்லாம். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்து லக்னோவில் உள்ள நாகா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கைசர்பாக் என்ற பகுதிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]
IMG 20230330 WA0053

You May Like