காங்கேயம் அருகே இளைஞர் ஒருவர் தனது காதலியை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பன் பாளையம் காலனியைச் சார்ந்தவர் செந்தில். இவரது மனைவியின் பெயர் பிரேமா(30), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செந்திலை பிரிந்த பிரேமா அதே காலணியில் வேறொரு வீடு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணி செய்து தனது குடும்பத்தையும் கவனித்து வந்தார். இந்நிலையில் பிரேமாவுக்கும் நத்தக்காடையூர் பகுதியைச் சார்ந்த விஜய்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேமாவை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் விஜய். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஜய் அவரது வீட்டிலிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில் பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரேமா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்தார். இதனைக் கண்ட அவர்கள் தீயை அணைத்து பிரேமாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார் பிரேமா. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறை விஜய் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது பிரேமாவும் விஜய்யும் தனிமையிலிருந்த உல்லாச புகைப்படங்களை பிரேமா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் தனது காதலியை மண்ணெண்ணெய் ஊற்றியெரித்து கொலை செய்ததை காவல்துறையிடம் ஒப்பு கொண்டார்.