திரைப்பட இயக்குநர் செல்வமணி வீட்டில் இருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டத விருகம்பாக்கம் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜமுத்திரை, புலன்விசாரணை, செம்பருத்தி,ராஜஸ்தான் மற்றும் குற்றப்பத்திரிகை உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபலமடைந்தவர் ஆர். கே.செல்வமணி. மேலும், இவர் நடிகையும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவார்.
பெப்சி என்ற திரைப்பட இயக்கத்திற்கு செல்வமணி தலைவராக இருந்தார். தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் சங்க தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் இவரது வீடு அமைந்துள்ள நிலையில், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.