3 முறை கள்ளக்காதலனுடன் ஓட்டம்! கணவனுக்கு கச்சிதமாக ஸ்கெட்ச் போட்ட மனைவி!

கடலூர் மாவட்டத்தில் மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் வயது 34 இவரது மனைவி பெயர் ராதிகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவிற்கு அப்பகுதியைச் சார்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இரண்டு வருடங்களில் மூன்று முறை ராதிகா தினேஷ் உடன் ஓடி இருக்கிறார். மூன்று முறையும் காவல்துறையினர் தலையிட்டு ராதிகாவை மீட்டு வந்து பாலகிருஷ்ணன் உடன் சமாதானம் பேசி சேர்த்து வைத்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு சடலமாக கடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி செய்த பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரணை செய்தனர். அவரது மனைவி ராதிகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலகிருஷ்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் . இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

1newsnationuser5

Next Post

இந்த மசாலாப் பொருட்களை பாலில் கலந்து குடியுங்கள்!... சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்!...

Thu Mar 16 , 2023
சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களை வைத்து நீரிழிவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனைகளை தீர்க்கலாம். இன்றைய வாழ்க்கை முறையில் நீரிழிவு நோய் என்பது இளம் வயதினர் வரை அதிகளவில் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான சிகிச்சை முறைகளை பலரும் கையாண்டு வருகின்றனர். இந்தநிலையில், தினமும் பால் உட்கொள்வதன் மூலம், உடலில் சக்தியை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நோயை […]
Spices

You May Like