ஏமன் நாட்டைச் சார்ந்த 21 வயது மாணவிக்கு கண்களில் காச நோய் என்கிற டீபி வந்த சம்பவம் மருத்துவ உலகை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏமன் நாட்டைச் சார்ந்தவர் ஆபிதா 21 வயதான இவர் மருத்துவ பரிசோதனை நிலைய படிப்பில் மாணவியாக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் எடை இழப்பு ஏற்பட்டது மூன்று மாத இடைவேளையில் 14 கிலோ வரை எடையை இழந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என புரியாமல் அச்சத்தில் இருந்திருக்கிறார் ஆபிதா. இந்நிலையில் தனது உறவினர் ஒருவர் இந்தியாவின் பூனே நகரில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் காண்பதற்காக இந்தியா வந்த ஆபிதா அங்கிருக்கும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்த போது தான் தனக்கு கண்களில் டியூபர் குளோசிஸ் நோய் வந்திருப்பதை பரிசோதனைகள் மூலமாக அறிந்து கொண்டார். பின்னர் மருத்துவமனையின் தீவிரமான கண்காணிப்பில் இருந்து அவர் இந்த நோயின் பிடியில் இருந்து முழுவதுமாக குணமடைந்து தற்போது தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணர் சாம்ராட்ஷா தெரிவிக்கையில் நாங்களும் இந்த பிரச்சினையினால் மிகவும் குழம்பிப் போயிருந்தோம் எண்ணற்ற பரிசோதனைகளை எடுத்து பார்த்த போதும் அவருக்கு என்ன பிரச்சனை நாள் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை . அவருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அல்லது மரபு ரீதியாக ஏதேனும் பிரச்சனை இருக்குமா என தீவிரமான ஆய்வுகளை செய்தோம் ஆனால் அவற்றின் முடிவுகளும் எதிர்மறையாகவே வந்தது. இந்நிலையில் அவரது கண்களை பரிசோதித்துப் பார்க்கும்போது அதில் ஏராளமான கிரானுலோமாக்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்தது.
இதன் மூலம் அவருக்கு டியூபர்குளோசிஸ் இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம். அது தொடர்பாக முதல் பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த முடிவுகளும் எதிர்மறையாகவே வந்தன. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனையில் அவருக்கு கண்களில் காச நோய் தாக்கியிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் இந்த நோயிலிருந்து முற்றிலுமாக மீண்டு விட்டார். தற்போது வழக்கமான தனது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற ஏப்ரல் மாதம் பரிசோதனைகளுக்காக இந்தியா வர இருக்கின்ற வரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என கூறினார். இது பற்றி பேசிய ஆபிதா தனக்கு கண்களில் டியூபர்குளோசிஸ் நோய் இருப்பதை அறிந்து தான் மிகவும் உடைந்து போய்விட்டதாக தெரிவித்தார். மேலும் இந்த நோயினால் தனது கண் பார்வை பறிபோய் விடுமோ என மிகவும் பயந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்களின் சீரான வழிகாட்டல் மற்றும் அக்கறையின் காரணமாக தான் இந்த நோயிலிருந்து தற்போது முழுமையாக மீண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.