காதலியை கர்ப்பமாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் ஹல்டியா கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், அந்த இளம்பெண் சமீபத்தில் கர்ப்பமாகி உள்ளார். இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி கர்ப்பத்திற்கு காரணமான காதலனை வற்புறுத்தியுள்ளார்.


ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடைய காதலன் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் அந்த பெண் நேற்று முன் தினம் இரவு மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கர்ப்பிணி காதலியை அடித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு.. சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியை உயர்த்திய மத்திய அரசு... விவரம் உள்ளே...

Fri Sep 30 , 2022
அடுத்த காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு நேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக ம்க்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு […]
Savings Deposit

You May Like