3 மாநிலங்களில் அதிரடி சோதனை..!! சிக்கியது என்ன..? என்ஐஏ பரபரப்பு விளக்கம்..!!

கோவை கார் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது என என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது.


தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து என்ஐஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகியவை தொடர்பாக தான் இந்த 3 மாநில சோதனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 40 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையில், பல்வேறு மின்னணு சாதனங்கள், ரூ.4 லட்ச ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CHELLA

Next Post

வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

Wed Feb 15 , 2023
எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தியது. இதையடுத்து, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வட்டி உயர்வை அறிவித்தன. இந்நிலையில், நாட்டின் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கு வட்டியை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. […]
1089256 sbiloan

You May Like