மாணவர்கள் இதை செய்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை…

படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது..

பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.. பேருந்து படிகட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது, சீருடையிலேயே மதுபானம அருந்துவது பிற போதை பொருட்களை பயன்படுத்துவது என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..


அந்த வகையில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.. கூட்ட நெரிசல், போதிய பேருந்து இயக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வது பல நேரங்களில் ஆபத்தை விளைவிக்கிறது..

இந்நிலையில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.. விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.. மாணவர்களுக்கு படிகட்டு பயணத்தின் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்..

பற்றாக்குறையை சரி செய்ய கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.. படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..

1newsnationuser1

Next Post

“ இதுக்கு அந்த 25 கோடி பரிசு கிடைக்காமயே இருந்திருக்கலாம்..” அதிர்ஷ்டக்கார ஆட்டோ ஓட்டுநர் வேதனை..

Sat Sep 24 , 2022
கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை ஆட்டோ டிரைவர் ஒருவர் வென்றார்.. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.. தனது மகள் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் […]
1327414 onam bumper lottery

You May Like