படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது..
பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.. பேருந்து படிகட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது, சீருடையிலேயே மதுபானம அருந்துவது பிற போதை பொருட்களை பயன்படுத்துவது என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
அந்த வகையில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.. கூட்ட நெரிசல், போதிய பேருந்து இயக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வது பல நேரங்களில் ஆபத்தை விளைவிக்கிறது..
இந்நிலையில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.. விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.. மாணவர்களுக்கு படிகட்டு பயணத்தின் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்..
பற்றாக்குறையை சரி செய்ய கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.. படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..