நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாத்தி இந்த திரைப்படம் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது.
இதனையடுத்து அடுத்ததாக இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு தன்னுடைய 5வது திரைப்படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார் தனுஷ். இதன் பணி முடிந்த பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கர்ணன் என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்ற இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.