தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகரைச் ராஜா (வயது 33) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென ராஜா உயிரிழந்தார்.
இதை அறிந்த நடிகர் ரவி உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக இருப்பதாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார்.
Read More: கேரளாவில் பரபரப்பு…! அண்ணாமலையை வரவேற்க வைத்த பேனர்கள் அகற்றம்..!