போயஸ் கார்டனில் பிரமாண்ட பங்களா வாங்கியுள்ள நடிகர் சந்தானம்!

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமான சந்தானம், சினிமாவில் நடிக்க துவங்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஆர்யா, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சமீப காலமாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் குலுகுலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது கிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் விஐபிக்கள் ஏரியாவான போயஸ் தோட்டத்தில் நடிகர் சந்தானம் பிரமாண்டமான பங்களாவை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போயஸ் கார்டனில் ஏலத்துக்கு வந்த வீட்டை வாங்கி இருக்கிறாராம் நடிகர் சந்தானம். இதன் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் அடங்கிய பட்டியலில் தற்போது சந்தானமும் புதிதாக இணைந்துள்ளார். நடிகர் சந்தானம் போயஸ் கார்டனில் வாங்கியுள்ள இந்த பிரமாண்ட பங்களாவின் மதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த பங்களாவின் மதிப்பு பல கோடிகள் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

1newsnationuser3

Next Post

மகளிர் சுய உதவி குழு...! இதை எல்லாம் தவிர்க்க வேண்டும்...!அமைச்சர் உதயநிதி அதிரடி உத்தரவு...!

Sat Dec 31 , 2022
சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில்‌ நாம்‌ அடுத்த கட்டத்துக்குச்‌ செல்ல, சில பழைய நடைமுறைகளைக்‌ கைவிடலாம்‌ என்பதே இதன்‌ நோக்கம்‌. நமது அன்பு பரிமாற்றத்தில்‌ புத்தகங்கள்‌ இடம்பெற்றதன்‌ மூலம்‌, நாம்‌ அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத்‌ தொடங்கி இருக்கிறோம்‌. அதேபோல இப்போது […]
Udhayanidhi

You May Like