தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பகா நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய்யும் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : விஜய் பாணியில் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்திய நடிகர் விஷால்..!!