நடிகை கனகாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா. 


இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு தனிமையாகிவிட்டார். இந்நிலையில், நடிகை கனகா வீட்டில் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவதாக தீயணைப்புத் துறைக்கு வியாழக்கிழமை வந்த தகவல் கிடைத்தது.

அதன்பின் கனகாவின் வீட்டிற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கனகா தீயணைப்பு வீரர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து அவர்களை திட்டினார். நீண்ட நேரத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகள், வீடு முழுவதும் குப்பைகள், துணிகள் என வீடு முழுவதும் பார்ப்பதற்கே முகம் சுளிக்கும் அளவிற்கு இருந்துள்ளது. பாழடைந்த வீட்டில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அந்த வீட்டின் நிலை இருந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் தலைமறைவாக இருந்த கனகா அன்று வெளியே வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

1newsnationuser5

Next Post

#திருவண்ணாமலை: 4ம் வகுப்பு மாணவிக்கு கன்னத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியர்..! 

Sat Dec 24 , 2022
திருவண்ணாமலையை அடுத்த கிடாதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் முனியன். இவரது 9 வயது மகள் மங்கலம் அருகே மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், தலைமை ஆசிரியை உஷா ராணி, இச்சிறுமி சரியாக படிக்கவில்லை என்று கன்னத்தில் தீக்குச்சியால் “சூடு” செய்துள்ளார். இதனால் சிறுமியின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டது குறித்து தலைமை ஆசிரியை உஷாராணியிடம் கேட்டதற்கு, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உரிய […]

You May Like