நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு… போலீசில் புகார்…!

நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழில் ஜெயம் ரவியுடன் கோமாளி மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பிரவீனா தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகையான பிரவீனாவை ஏற்கனவே ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியில் ஒருவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த அவர், பழிவாங்கும் நோக்கோடு எனது புகைப்படம் மற்றும் மகள், அம்மா, சகோதரி ஆகியோரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார் என்றும் தனது பெயரில் 100க்கும் மேற்பட்ட போலி முகநூல் டிவிட்டர் கணக்குகள் தொடங்கி அந்த நபர் ஆபாச படங்களை வெளியிட்டு வருவதாக கூறினார். இதையடுத்து கேரளாவில் மகளுடன் சென்று சைபர் கிரைம் போலீசில் பிரவீனா புகார் அளித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

2023 இறுதிக்குள் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசிகள்? - அதிர்ச்சி தகவல்...!

Sun Jan 1 , 2023
உலகின் பல்வேறு நாடுகளில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்கள் போன்று இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று […]
ஏலியன்கள்

You May Like