தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறையா…..? அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…..!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, வெயில் நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசின் சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொதுவாக மே மாதத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விடவும் மாறுபட்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மதியம் 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேநேரம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளது.

ஆகவே வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் கூடுதலாக விடுமுறை வழங்கி பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுமா என்று கேள்வி எழ தொடங்கியது. இது குறித்து பேசி உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை தாமதமாக திறப்பது தொடர்பாக தற்போது எந்த விதமான முடிவும் மேற்கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார்.

அதோடு வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதற்கு ஏற்றார் போல நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

மேலும் பேசிய அவர் அதிக அளவில் ஜே இ இ என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Post

மோடிக்கு மக்கள் மத்தியில் இதுதான் மிகப்பெரிய பலம்....! வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்த அமித்ஷா....

Sat Apr 22 , 2023
கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திடீரென்று அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் கர்நாடக மாநில சட்டசபை […]
நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

You May Like