சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்….! சபாநாயகரை சந்தித்த அதிமுகவின் கொறடா…..!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வது குறித்தும், இருக்கை விவகாரம் குறித்தும் அதிமுகவின் தலைமைக்கு கொரடா எஸ்.பி.வேலுமணி இன்று காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளார்.


எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஏற்கனவே சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் அந்த பரிந்துரையின் மீது சபாநாயகர் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்தகைய நிலையில், நேற்று அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.

ஆகவே சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்வது குறித்து அதிமுகவின் தலைமை கொறடா எஸ் பி வேலுமணி அவர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். அதேபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அருகிலேயே இருக்கின்ற இருக்கையில் தான் பன்னீர்செல்வம் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இவர்களுக்கு எல்லாம் கொரோனா தடுப்பூசி தேவையில்லை.. WHO வெளியிட்ட புதிய அறிவிப்பு..

Wed Mar 29 , 2023
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு மறுபரிசீலனை செய்துள்ளது.. அதன்படி, ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி தேவைப்படாமல் இருக்கலாம்.. ஆனால் […]
’மக்களே மீண்டும் லாக்டவுன் வரப்போகுது’..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

You May Like