#நாமக்கல் :தாயை இழந்த 2 ஆட்டுக் குட்டிகளுக்கு தினமும் பால் வழங்கும் பசுவின் பாசம்..!

நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார். 


இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது இறந்து விட்டது.தாய் ஆடு இறந்ததால் அதன் ஆட்டுக் குட்டிகள் பால் குடிக்க முடியாமல் பசியால் தவித்து வந்துள்ளது. 

இந்த நிலையில் மேய்ச்சலுக்காக சென்று விட்டு வரும் பசுவின் மடியை தேடிச் சென்று பாலுக்காக இரண்டு குட்டிகளும் முட்டியுள்ளது. இதனை தாய் பசுவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு பால் வழங்கியுள்ளது. 

அதன் பிறகு தினமும் ஆட்டுக் குட்டிகள் இதனையே வழக்கமாக்கிக் கொண்டன.சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் ஆட்டுக் குட்டிகள் பால் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது என ராமசாமி கூறியுள்ளார். பசுவின் இந்த தாயுள்ளம் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

1newsnationuser5

Next Post

சூப்பர் நியூஸ்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Nov 30 , 2022
இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். மேலும், இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொது விடுமுறை […]
bank in e1654658464705

You May Like