#விழுப்புரம் : விஷம் அருந்தி விட்டு காவல் நிலையம் சென்ற பெண் கூறிய அதிர்ச்சி காரணம்.!

விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார். 


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார். 

இந்த நிலையில், தனது மகள் வாழ்க்கையில் ஏற்படும்  மன உளைச்சலால் ஞான சௌந்தரி விஷம் குடித்துவிட்டு மருமகன் மீது புகார் அளிப்பதற்காக மயிலம் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அதன் பின்னரே, தான் விஷம் அருந்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதை கேட்டு, அதிர்ச்சியடைந்த அவருக்கு உப்பில் தண்ணீரை கலந்து கொடுத்து வாந்தி எடுக்க வைத்து போலீசார் முதலுதவி அளித்துள்ளனர். அதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

’முகத்தை கிழித்த முகநூல் நட்பு’..!! ’காதலிக்க மறுத்ததால் பாய் பெஸ்டி வெறிச்செயல்’..!!

Thu Nov 17 , 2022
காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கிபயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று, சோனு இரவு […]
கர்ப்பிணி மனைவிக்கு ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்த கொடூர கணவன்..!! திடுக்கிடும் திகில் சம்பவம்..!!

You May Like