விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது மகள் வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சலால் ஞான சௌந்தரி விஷம் குடித்துவிட்டு மருமகன் மீது புகார் அளிப்பதற்காக மயிலம் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அதன் பின்னரே, தான் விஷம் அருந்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதை கேட்டு, அதிர்ச்சியடைந்த அவருக்கு உப்பில் தண்ணீரை கலந்து கொடுத்து வாந்தி எடுக்க வைத்து போலீசார் முதலுதவி அளித்துள்ளனர். அதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.