கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணமாகி 34 வயதில் மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரம் கள்ளக்காதலனை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் கணவருக்கு தெரியவரவே வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதன் பின்னர் இருவரும் தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றனர். மீனவரின் மகள் அவருடனே படுத்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து எழுந்த மீனவர் மனைவி விபரீத முடிவு எடுத்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அவர் படுத்திருந்த அறை கதவை திறந்து பார்த்தார். ஆனால் அவர் பார்த்த காட்சியால் அவர் மனம் நொறுங்கிப் போனது.. கணவர் வீட்டில் இருந்தபோதே மனைவி தனது கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த மீனவர் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கினார். அப்போது கள்ளக்காதலனுக்கும் மீனவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். ஊரார் முன்னிலையில் கையும் களவுமாக சிக்கியதால் அவமானம் அடைந்த கள்ளக்காதலன் பிளேடை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



