அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு…..! ஓபிஎஸ் உட்பட நால்வரின் மனுக்களும் இன்று விசாரணை…..!

அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பு தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.


அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜே.சி.டி பிரபாகர் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகளை தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இடைக்கால மனுவை நிராகரித்தார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட 4 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அந்த மேல்முறையீட்டு மனுக்களில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனு மட்டும் நீதிபதி ஆர் மகாதேவன் முஹம்மது ஷபிக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனதை விசாரிக்க ஆயத்தமான போது மனோஜ் பாண்டியன், பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒரு தரப்பில் நாங்களும் மேல்முறையீடு செய்திருக்கிறோம் என்றும், தங்களுடைய மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்பதால் பன்னீர்செல்வம் வழக்குடன் எங்களுடைய வழக்கையும் சேர்த்து மதியமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நீதிபதிகள் அந்த மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறினர். அதன் பிறகு பன்னீர்செல்வம் உட்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஒன்றாக மார்ச் மாதம் 30 ஆம் தேதியான இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் விதத்தில் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்குகள் அனைத்தும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

Next Post

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தரவுகளும் இல்லை : மத்திய அரசு

Thu Mar 30 , 2023
கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தபீர் காவ், கடந்த 4 ஆண்டுகளில் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்ட கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மாநில வாரியான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.. மத்திய புள்ளியியல் மற்றும் திட்டத் […]
eef643e398af6aa49dad102b3e8e2b7364ef5817e3849af79425d6e679589220

You May Like