“Agniban” ராக்கெட் திடீர் நிறுத்தம்!… ஏன் தெரியுமா?

Agniban: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் இருந்து முதன் முறையாக ‘ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்’ தயாரித்த ‘அக்னிபான்’ ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: இந்தியாவை உளவு பார்க்கும் சீனா

Baskar

Next Post

Election 2024 | பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்.!! திருநெல்வேலியில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.!!

Thu Mar 21 , 2024
Election 2024: வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) சார்பாக நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்திருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் 4-ஆம்தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசியல் […]

You May Like