இந்திய வேளாண் துறை 6 ஆண்டுகளில் 4.6 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது…! மத்திய அரசு தகவல்…!

கடந்த ஆறாண்டுகளில் 4.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் வேளாண் துறை தொடர்ந்து மேல்நிலையில் உள்ளது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மேம்பாடு, உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு வேளாண் துறையும் அதன் துணைத் தொழில்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

farmer

சமீபத்திய ஆண்டுகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021-22-ல் இதன் மதிப்பு 50.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2022-23-ல் வேளாண் கடனுக்கு ரூ.18.5 லட்சம் கோடியை அரசு இலக்காக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கணிசமான அளவு கூடுதலாக கடன் வழங்கப்படுகிறது. 2021-22-ல் ரூ.16.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாக 13 சதவீதம் கடன் வழங்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

2022 டிசம்பர் நிலவரப்படி, 3.89 கோடி தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.4,51,672 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் அட்டை வசதி, மீனவர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், 2022 அக்டோபர் 17 நிலவரப்படி 1.0 லட்சம் மீனவர்களுக்கும், 2022 நவம்பர் 4 நிலவரப்படி, 9.5 லட்சம் கால்நடை வளர்ப்போருக்கும் கடன் அட்டைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முழு ஆய்வு அறிக்கை: https://www.indiabudget.gov.in/economicsurvey/index.php

Vignesh

Next Post

2022 டிசம்பரில் நடைபெற்ற யுபிஎஸ்சி பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள்...!

Wed Feb 1 , 2023
2022 டிசம்பரில் நடைபெற்ற பணி நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இறுதி செய்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்டப் பதவிகள் அடங்கிய பல பதவிகளுக்கு தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் நடைபெற்றது. இதை அடுத்து 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற […]
யுபிஎஸ்சி தேர்வு..!! இனி மொபைல் இருந்தால் மட்டும் போதும்..!! ஏன் தெரியுமா..?

You May Like