ஏர் இந்தியா இன்ஜினியரிங் லிமிடெட் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர்கிராஃப்ட் சர்வீஸ் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி யார் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர் கிராஃப்ட் டெக்னீசியன் பணிகளுக்கான 90 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் பணிபுரிய விருப்பம் உள்ள நபர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது .
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு சம்பளமாக 28,000 ரூபாயிலிருந்து 36,000 ரூபாய் வரை வழங்கப்படும். இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியுடைய நபர்கள் 03.03.2023 தேதிக்குள் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு முன்பாக மருத்துவ சோதனை நடத்தப்படும். அதற்கான கட்டணத்தையும் விண்ணப்பதாரர்களை வழங்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான பிற தகவல்களை அறிய aiel.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.