“வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தான் கூட்டணி..!” – பாமக எம்.எல்.ஏ பரபர பேட்டி

pmk mla

பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.


இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எந்த கூட்டணிக்குள் இணையப்போகிறது என்பது கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான விவாதமாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்திருந்த பாமக, இம்முறை எந்த கட்சியுடன் இணைகிறது என்பது குறித்து எதுவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில், பாமக எம்எல்ஏ சதாசிவம் இன்று நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “பாமக அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கிய பெருமைக்குரிய தலைவர். அவரின் தலைமையிலான கூட்டணியுடன் நிச்சயமாக பாமக சென்று சேரும்.” என்றார்.

வன்னியர் சமூகத்தின் நலனுக்காக இட ஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்பதையும், அந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படலாம் என்பதையும், சதாசிவம் நேரடியாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கூட்டணியும் அறிவிக்கப்படவில்லை என்பதால், சதாசிவத்தின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Read more: இனி இன்பாக்ஸில் மெசெஜ் குவியாது.. இ-மெயில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட் வந்தாச்சு..!!

English Summary

“Alliance with AIADMK in the upcoming assembly elections..!” – PMK MLA interview

Next Post

விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் என்றால் என்ன..? அது எவ்வாறு விபத்தை ஏற்படுத்தும்..?

Sun Jul 13 , 2025
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 98 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அறிக்கை கூறுகிறது.  இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் கொல்லப்பட்டனர். அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு […]
fuel switch

You May Like